தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
வளரும் நட்சத்திரம் - ஆயக்குடி - திரு.C.கார்த்திகேயன்

வளரும் நட்சத்திரம் - ஆயக்குடி - திரு.C.கார்த்திகேயன்

Admin 11 Aug 2020 | 04:24 PM
பகிர்:

திரு.C.கார்த்திகேயன் அவர்கள் 20.05.1969-இல் திண்டுக்கல் மாவட்டம், பழனி  அருகேயுள்ள ஆயக்குடி கிராமத்தில் திரு.சின்னசாமி – திருமதி.மாணிக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். இவர் கட்டிடத்துறையில் பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.சுதாமணி என்ற மனைவியும் K.விஷ்ணு பிரசாத் என்ற மகனும் K.யேகவஷினி என்ற மகளும் உள்ளனர்.

postgallery(186)

மாணவப்பருவத்திலிருந்தே தி.மு.க வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து பணியாற்றி வரும் திரு.கார்த்திகேயன் அவர்கள், 1989-ஆம் ஆண்டு T.K.N.புதூர் கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி மாணவராக இருந்தபொழுது இலங்கைத்தமிழர் பிரச்சினை, இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்கள், மறியல், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். 1997 முதல் 2002  வரை பழனி ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2003-2011 திண்டுக்கல் மாவட்ட பிரதிநிதி. கட்சிப்பணிகளில் தீவிரமாக பணியாற்றும் திரு.கார்த்திகேயன் அவர்கள், கட்சியின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம், மாநாடுகளுக்கு பெருமளவு தொண்டர்களைத் திரட்டி கலந்து கொள்வார். 

postgallery(186)

 திரு.கார்த்திகேயனின் சிறப்பான கட்சிப்பணியால் 2006-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆயக்குடி பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பைப்பெற்றவர், இதில் மகத்தான வெற்றிபெற்று 2011-வரை பேரூராட்சித் தலைவராக பணியாற்றினார். பேரூராட்சித் தலைவராக இருந்தபொழுது பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காங்கிரீட் சாலைகள், நீர்தேக்கத்தொட்டிகள், உயர்மட்ட டேங்குகள், தெருவிளக்கு, குடிநீர் வசதி, மயான வசதி, அங்கன்வாடி மையம், ரேசன் கடைகள், ஏழை-எளியவர்களுக்கு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம், இலவச வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளார்.

postgallery(186)

2012-முதல் இன்று வரை ஆயக்குடி பேரூர்கழகச் செயலாரக பொறுப்பு வகித்து வரும் திரு.கார்த்திகேயன் அவர்கள், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கட்சிக்கு மிக அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கொரானோ நிவாரணப்பணிகளில் தீவிரமாக பங்கெடுத்து வருபவர், ஆயிரக்கணக்கானவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறார். மாணவப்பருவத்திலிருந்து தீவிர அரசியலில் பங்கேற்று வரும் திரு.கார்த்திகேயன் அவர்கள் வரும்காலங்களில் கட்சியிலும் ,நிர்வாகத்திலும் மிகப்பெரிய பதவிகளைப்பெற்று, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Mr.C.Karthikeyan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண