தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - பவானி - திரு.M.ஜெகநாதன்

நாளைய நம்பிக்கை நட்சத்திரம் - பவானி - திரு.M.ஜெகநாதன்

Admin 06 Oct 2020 | 04:19 PM
பகிர்:

திரு.M.ஜெகநாதன் அவர்கள் 02.11.1983-இல் ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஒரிச்சேரிபுதூர் கிராமத்தில் திரு.மாரசாமி – திருமதி.பொம்மியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை  வர்த்தக மேலாண்மை (B.B.A) பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.J.கோமதி என்ற மனைவியும் J.சாகித்யன் என்ற மகனும் உள்ளனர்.

postgallery(218)

டாக்டர்.கலைஞர் அவர்களின் செயல்திட்டங்களால் ஈர்க்கப்பட்ட திரு. M.ஜெகநாதன்  அவர்கள் 2000 ஆம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தவர், கிளைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு பவானி ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துகொள்வதுடன், கட்சி அறிவிக்கும், மறியல்,ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்.  

அரசியல் மட்டுமல்லாது சமுதாயப்பணியிலும் ஆர்வமுடையவர் வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாளை சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடுவதுடன், மாவீரன் நினைவுநாளில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

postgallery(218) 

இதுவரை தேர்தலில் எந்த பதவிக்கு போட்டியிடவில்லை என்றபொழுதிலும், சாதி, மதம் பாராமல் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார். கொரோனா  பொதுமுடக்கத்தின் காரணமாக  வாழ்வாதரங்களை இழந்துவாடிய ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை செய்துள்ளார். சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான திரு. M.ஜெகநாதன் அவர்கள் பொதுவாழ்வில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி சிறப்பான பதவிகளைப் பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

இளம் அரசியல் பிரமுகர்கள் தமிழ்நாடு Bhavani Mr.M.Jagannathan
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண