இளம் அரசியல் பிரமுகர்கள்
இளம் அரசியல் பிரமுகர்கள் தொடர்பான செய்திகள்.
அரசியல் பிரபலங்கள் - கமுதி - திரு.C.பூப்பாண்டி
<p><b>திரு.C.பூப்பாண்டி அவர்கள் 07.06.1987-ல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடையங்குளம் கிராமத்தில் திரு.சின்னதம்பி - திருமதி.இந்திரா தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாக பிறந்தார். மதுரையிலுள்ள யாதவா கல்லூரியில் வணிகவியல் துறையில் (B.Com) இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். திருமதி.அனிதா தம்பதியினருக்கு P.அக்க்ஷரா பாண்டி என்ற மகளும் P.கிரித்தீக் என்ற மகனும் உள்ளனர்.</b></p><div><b>postgallery(208)</b></div><div><b><br></b></div><p>இடையங்குளம் பூர்வீகமாகக்கொண்ட திரு.பூப்பாண்டி குடும்பம் தொழில் நிமித்தமாக மதுரையில் குடியேறி சுமார் 35 வருடங்களாக வசித்து வருகின்றனர். அந்தவகையில் மதுரையில் படித்து, வளர்ந்தவரான திரு.பூப்பாண்டி, இளங்கலை பட்டம் பெற்ற பின் Feather Soft என்ற தனியார் நிறுவனத்தில் வட்டார விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.</p><p>இளம் வயதிலிருந்தே மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் பேச்சால் கவரப்பட்டு 2011 ஆம் ஆண்டு மதிமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டு கழகப்பணியாற்றி வரும் திரு..பூப்பாண்டி அவர்கள் 2013 முதல் 2018 வரை மதுரை மேற்கு ஒன்றிய செயளாலராக பணியாற்றியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயளாலராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று வரை அப்பதவியில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். கட்சியின் நிகழ்ச்சிகள், தலைவரின் நடைபயணங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். தவிர கட்சி நடத்தும் பல்வேறு போராட்டங்கள், மறியல், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை கைதாகியுள்ளார். </p><p><span style="font-weight: 700;">postgallery(209)</span> </p><p>திரு.பூப்பாண்டி அவர்கள் அரசியல் பணியில் மட்டுமல்லாது சமுதாய பணியிலும் ஆர்வம் கொண்டவர், வருடம் தோறும் மாவீரன் கட்டபொம்மன் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் சமுதாய மக்களை ஒன்று திரட்டி, மதுரையிலுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். மேலும் பல்வேறு சமுதாய அமைப்புகள் அழைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஊக்கமும், உதவியும் அளித்து வருகிறார்.</p><p><span style="font-weight: 700;">postgallery(208)</span><br></p><p>தேர்தல் களத்தில் இதுவரை எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்றபொழுதிலும், தன்னை நாடிவரும் பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் மதுரை மாநகரில் கொரோனா நோய் பரவல் உச்சத்தில் இருந்தபொழுது, பொதுமுடக்கத்தின் காரணமாக வாழ்வாதரங்களை இழந்துவாடிய ஏழை-எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி என பல்வேறு உதவிகளை செய்தவர் திரு.பூப்பாண்டி. அரசியல், சமுதாயம், பொதுதளத்திலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கிவரும் திரு.பூப்பாண்டி அவர்கள், வரும் காலங்களில் சிறப்பான பதவிகளைப்பெற்று சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம். </p>