தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
த.வீ.ப.க.மாநில தலைவர் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து!

த.வீ.ப.க.மாநில தலைவர் பிறந்தநாள் - தலைவர்கள் வாழ்த்து!

Radheyan 10 Jun 2023 | 10:21 PM
பகிர்:

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மாநில தலைவரும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான திரு.ஆர்.வரதராஜன் அவர்களின் பிறந்தநாளையொட்டி சமுதாய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொட்டிய நாயக்கர்.காம் இணையதளத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட முன்னாள் தலைவரும், அம்மா பேரவை ஒன்றியச் செயலாளருமான சத்தியமங்கலம் என்.பவுல்ராஜ் அவர்கள், கம்பளத்தாரின் அடையாளமாக விளங்கும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் சமுதாயப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வரும் மாநிலத் தலைவரின் பணி மேன்மேலும் சிறக்க, இன்னும் பல பிறை கண்டு வாழ்வாங்கு வாழ்ந்து சமுதாயப்பணியாற்றிட அன்புடன் வாழ்த்துவதாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பண்பாட்டுக் கழக மாநில காப்பாளர்களில் ஒருவரான மோதூர் முனுசாமி அவர்கள், நாற்பதாண்டு கால சமுதாயப்பணியில் தங்கள் தலைமையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மனநிறைவு கொள்வதாகவும், எப்போதும் அன்பு பாராட்டும் பரந்த உள்ளம் நூறாண்டு கடந்து வாழட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ் மற்றும் பலவேறு கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் த.வீ.க.ப.கழக மாநிலத் தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு R.Varadharaj thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண