தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Radheyan 08 Aug 2023 | 04:37 PM
பகிர்:

இராஜகம்பளத்தாரின் ஊணோடும், உயிரோடும் இரண்டறக் கலந்தவர், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனார் பெயரில் போக்குவரத்துக்கழகம் மற்றும் மாவட்டம் அமைய ஊன்றுகோலாக இருந்தவர் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள். மேலும்  கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது எர்ர கொல்லவார் பிரிவை MBC பட்டியலில் சேர்க்க துணை நின்றதோடு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் முயற்சியால் மாவீரன் வீரபாண்டியனாருக்கு வாஜ்பாயி தலைமையிலான மத்திய அரசு தபால்தலை வெளியிட்டபோது, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவிற்கு அன்றைய தமிழக முதல்வர் கலைஞரை அழைத்து வந்ததோடு, தமிழகம் முழுவதுமுள்ள கம்பளத்தார்கள் விழாவில் பங்கேற்க ஏதுவாக பேருந்து சேவையை இலவசமாக வழங்கியவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அவர்கள்.

கடந்த ஜனவரி 29 ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவிற்கு தலைமை விருந்தினராக வரவேண்டுமென்று இறுதி நேரத்தில் தொலைபேசியில் விடுக்கப்பட்ட அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டதோடு, திடீரென அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டு, தொகுதியை விட்டு அமைச்சர்கள் யாரும் வெளியே போகக்கூடாது என்ற தலைமையின் கட்டளைக்கு தளர்வு வாங்கி முப்பெரும்விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், அவர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூறக் கடமைப்பட்டுள்ளோம். 

இங்ஙணம் கம்பளத்தார்களின் ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் பங்காற்றிவரும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் பல்லாண்டு வாழ வீரசக்கதேவி அருள்புரிய வேண்டுமாய் கம்பளத்தாரின் சார்பில் வேண்டி, நீடித்த ஆயுலோடும், ஆரோக்கியத்தோடும் வாழ கம்பளத்தாரின் சார்பில் வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு KKSSR thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண