தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
தெலுங்கானா அமைச்சர் பிறந்தநாள் விழா - இராஜகம்பளத்தார் சார்பில் நேரில் வாழ்த்து!

தெலுங்கானா அமைச்சர் பிறந்தநாள் விழா - இராஜகம்பளத்தார் சார்பில் நேரில் வாழ்த்து!

Radheyan 10 Oct 2023 | 05:01 PM
பகிர்:

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக உள்ளவர் தலசானி சீனிவாச யாதவ். 1986 இல் ஹைதரபாத் மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய சீனிவாச யாதவ், அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சியில் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சந்திரபாபு நாயுடுவின் மிக நெருங்கிய நண்பரான தலசானி சீனிவாச யாதவ் ஆந்திர அரசியலில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.


மாநில பிரிவினைக்குப்பிறகு, தெலுங்கானா மாநிலத்தில் செயல்பாட்டைக் குறைத்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திரா அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வந்தது. இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சியில் தன்னோடு பயணித்த சந்திரசேகரராவ் அழைப்பை ஏற்று, தெலுங்கானா ராஸ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்து 2014 முதல் வணிகவரித்துறை அமைச்சராகவும், 2019 முதல் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். தெலுங்கானா முதல்வரின் நம்பிக்கைக்குறியவராகவும், ஹைதரபாத் மாநகரின் முடிசூடா மன்னராகவும் வலம் வரும் தலசானி சீனிவாச யாதவ், தமிழகத்தின் அமைச்சர் சேகர்பாபு அவர்களை அரசியல் வட்டாரத்தில் குறிப்பிடுவதுபோல், 24 மணி நேரமும் கால்களில் சக்கரத்தைக்கட்டிக்கொண்டு தெலுங்கானாவின் மூலை முடுக்குகளில் எல்லாம்  சுற்றிச்சுற்றி வலம் வருபவர். தினமும் காலையில் அவர் இல்லத்திலிருந்து புறப்படும்போது நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் காத்திருப்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று.

              

இந்நிலையில், தெலுங்கானா மாநில திரைத்துறையின் சார்பில் அமைச்சரின் பிறந்தநாள் கடந்த வெள்ளிக்கிழமை (6.10.2023) அன்று ஹைதரபாத் கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி ஸ்டேடியத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை அமைப்புச் செயலாளர் மு.சரவணன், திருப்பூர் ஏஞ்சல் பிரிண்டிங் உரிமையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு, இராஜகம்பளத்தாரின் சார்பில் அமைச்சருக்கு பிறந்தநாள் பரிசு வழங்கி வாழ்த்துக்கூறினர்.

குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு Talasani Srinivasa Yadav thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண