தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
மாமன்னர் திருமலை நாயக்கரின் 438-வது ஜெயந்தி! - மதுரையில் கோலாகல கொண்டாட்டம்!

மாமன்னர் திருமலை நாயக்கரின் 438-வது ஜெயந்தி! - மதுரையில் கோலாகல கொண்டாட்டம்!

Admin 28 Jan 2021 | 05:03 PM
பகிர்:

1371 முதல் மதுரையில் அமைந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்களின் தொடர்ச்சியாக கிபி 1623 முதல் 1629 வரை மதுரை ஆட்சி செய்தவர் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்கள். அவரின் சிறப்பான பணிகளாலும், நிர்வாகத்திறமையாலும் போற்றப்பட்டு வருபவர் மாமன்னர் திருமலை நாயக்கர். அவரின் 438-வது பிறந்தநாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கம்பளத்தார் சமுதாயத்தின் சார்பிலும், பல்வேறு தெலுங்கு அமைப்புகள் சார்பிலும் கொண்டாடப்படுகிறது.


இராஜகம்பளத்தார் சமுதாய அமைப்பான விடுதலைக்களம் சார்பில் மதுரையில் உள்ள மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் திரு.இராமமோகன்ராவ் அவர்களும், நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.

postgallery(237)

அதேபோல், தமிழ்நாடு இராஜகம்பளத்தார் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ளும் அதன் நிறுவனத்தலைவர் திரு.இரவி நாயக்கர் அவர்கள் கழகத்தின் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.


அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் திரு.சி.எம்.கே.ரெட்டி அவர்களும், பொதுச்செயலாளர் நாயக்கர் திரு.நந்தகோபால் அவர்களும் மதுரையில் உள்ள மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர்.


குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு Thirumalai Nayakar Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண